ரிசர்வ் வங்கி 200 ரூபாய் நோட்டை வெளியிடப் போகிறதாமே!
சிறு மதிப்பு நோட்டுக்களான 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை குறைந்த அளவே புழக்கத்தில் உள்ளதால், 200 ரூபாய் நோட்டை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை: ரிசர்வ் வங்கி 200 ரூபாய் நோட்டை அச்சிட்டு புழக்கத்தில் விட உள்ளது. வரும் ஜூன் மாதத்தில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் 8 ஆம் தேதி, பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். அதன்பிறகு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் மக்கள் வங்கிகளின் வாசல்களில் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். கையில் உள்ள பணம் செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியாலும் நீண்ட வரிசையில் காத்திருந்தபோதும் 100க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர்.

எவ்வளவு கருப்புப் பணம் வசூலானது?
கருப்புப் பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டதாக மத்திய அரசு தெரிவித்த போதும் இதுவரை, வசூலான கருப்புப் பணம் குறித்து தகவல் வெளியிடவில்லை. அதுகுறித்து எந்த கட்சிகளும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சில்லறை மாற்றக் கஷ்டம்
பணமதிப்பிழப்பு அறிவிப்பை அடுத்து, புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. ஆனால், 2000 ரூபாய்க்கு சில்லறை மாற்றுவது இன்று வரை பெரிய பிரச்சனையாகவே உள்ளது. காரணம், 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் இல்லை.

200 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு
இதனை உணர்ந்த ரிசர்வ் வங்கி, 200 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்த உள்ளது. அதற்கான திட்டக் கூட்டம்ரிசர்வ் வங்கி போர்டு நடத்தியுள்ளது. அந்தக் கூட்டத்தில் வரும் ஜூன் மாதம் 200 ரூபாய் நோட்டை அச்சிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமைச்சரவை விரைவில் ஒப்புதல்
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக ரிசர்வ் வங்கி காத்துக்கொண்டுள்ளது. விரைவில் அதற்கான ஒப்புதல் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications