வங்கிகளில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் இன்று முதல் தளர்த்தப்படும்: ரிசர்வ் வங்கி
வங்கிகளில் பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகள் இன்று முதல் தளர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மும்பை: வங்கிகளில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் இன்று முதல் தளர்த்தப்படும் என்றும், வங்கிகளில் எடுக்கும் பணத்தை 500, 2,000 ரூபாய் நோட்டுகளாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக திங்கள்கிழமை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கிகளில் இன்று முதல் பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகள் தளர்த்தப்படுகிறது. வாடிக்கையாளர்களின் தேவையை பரிசீலித்து தேவைப்படும் பணத்தை வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வங்கிகளில் இன்று முதல் எடுக்கும் பணத்தை ரூ.500, ரூ2,000 நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். கட்டுப்பாடுகளால் பணத்தை வங்கியில் செலுத்த தயங்குவதை போக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே வங்கி கணக்கில் இருந்து ரூ.24,000 மட்டுமே எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications