கையில் இருக்கும் ஆயுதங்களை வைத்துக் கொண்டு போருக்கு 'ரெடி'- ராணுவ தளபதி பிபின் ராவத்
கைவசம் உள்ள ஆயுதங்களுடன் யுத்தத்துக்கு தயார் என்கிறார் ராணுவ தளபதி பிபின் ராவத்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

இருக்கும் ஆயுதங்கள் போதும். நாங்கள் போருக்கு ரெடி- வீடியோ
டேராடூன்: பாதுகாப்பு படையினர் கைவசம் உள்ள ஆயுதங்களை வைத்துக் கொண்டு யுத்தத்துக்கு தயாராகவே இருக்கின்றனர் என கூறியுள்ளார் ராணுவ தளபதி பிபின் ராவத்.
டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது பிபின் ராவத் கூறியதாவது:
ஆயுத கொள்முதல் என்பது ஒருநாள் இரவில் நடைபெறுவது இல்லை. பாதுகாப்புப் படையினருக்கு போதுமான ஆயுதங்கள் இல்லை என எப்போதும் நாடாளுமன்ற குழு கூறி வருகிறது.

ஆயுதங்கள் என்ன மளிகைக் கடைகளில் கிடைக்கும் பொருளா? பணம் கொடுத்த உடன் கைக்கு வந்துவிடுமா? ஆயுத கொள்முதல் என்பது நீண்டகால நடவடிக்கை.
தற்போதைய நிலையில் இருக்கின்ற ஆயுதங்களுடன் யுத்தத்துக்கு நமது வீரர்கள் தயாராகவே உள்ளனர். துணை ராணுவத்தினரும் இந்த ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர்.
அரசு பணிகளில் சேருவோருக்கு 5 ஆண்டு ராணுவ பயிற்சி கட்டாயம் என்கிற முடிவு வரவேற்கத்தக்கது. இவ்வாறு பிபின் ராவத் கூறினார்.












Click it and Unblock the Notifications