For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. தேசிய பேரிடர் மீட்பு படை தயார்.. பிற மாநிலங்களில் இருந்தும் வர ஆயத்தம்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்திற்கு மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை- வீடியோ

    டெல்லி: தமிழகத்தில் தேவைப்படும் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை அறிவித்துள்ளது.

    வரும் 7ம் தேதி தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து தமிழகத்தில் ரெட் அலர்ட் பிறப்பித்து தேசிய பேரிடர் மையம் சுற்றறிக்கை வெளியிட்டது.

    Red Alert For Tamilnadu: National Disaster Response Force Ready

    இந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை, ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், மீட்பு படை வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகவும் சூழ்நிலைக்கு ஏற்ப அதிக வீரர்கள் தேவைப்பட்டால் பிற மாநிலங்களிலிருந்து அனுப்பத் தயாராக இருப்பதாகவும், பேரிடர் காலங்களில் தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் எதிரொலியால் கேரளாவிற்கு அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் 8 பேரிடர் மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. குழு ஒன்றுக்கு 40 முதல் 60 வீரர்கள் இருப்பார்கள். தமிழகத்திற்கு எத்தனை குழு தேவைப்பட்டாலும் அனுப்ப தயார். இவ்வாறு பேரிடர் மீட்பு குழு அறிவித்துள்ளது.

    English summary
    National Disaster Response Force says they are ready to tackle any situation in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X