செம்மரம் கடத்தியதாக ஆந்திராவில் மேலும் 10 தமிழர்கள் கைது
ரேணிகுண்டா: திருப்பதி அருகே இருவேறு இடங்களில் செம்மரம் வெட்டிக் கடத்த முயன்றதாக தமிழக தொழிலாளர்கள் 10 பேரை ஆந்திரா போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேயுள்ள சேஷாச்சலம் வனப்பகுதிகளில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, செம்மரங்களை வெட்டிக் கடத்த முயன்றதாக 9 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 27 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேபோல, ரங்கம்பேட்டை வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸார், செம்மரம் கடத்த முயன்றதாக ஒருவரை கைது செய்தனர்.
முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதியன்று ஆந்திர மாநிலம் திருப்பதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் செம்மரம் கடத்தச் சென்றார்கள் எனகூறி, செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த 20 அப்பாவி தொழிலாளர்கள் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications