தமிழர்களை திட்டமிட்டு சுடவில்லை - சொல்கிறது ஆந்திர அரசு
ஹைதராபாத்: சித்தூர் என்கவுண்டர் திட்டமிட்டு நடந்த ஒன்றல்ல. அது போலி என்கவுண்டரும் அல்ல. ஆந்திர மாநில காவல்துறையினர் மீது கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தியதால்தான் என்கவுண்டர் நடந்தது. அது எதிர்பாராத ஒன்று என்று ஆந்திர அரசு கூறியுள்ளது.
மேலும் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் செம்மரங்களைக் கடத்திச் சென்றதாகவும், ஆயுதங்களுடன் இருந்ததாகவும் ஆந்திர அரசு கூறுகிறது. இந்த விளக்கத்தை மத்திய அரசிடமும், தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் அளித்துள்ளது ஆந்திர அரசு.

இதுகுறித்து ஆந்திர அரசு கூறுகையில், செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் சேஷாசலம் மலைப் பகுதியில், ரோந்தில் ஈடுபட்டிருந்தபோது அங்கு கடத்தல் நடைபெறுவதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து முதலில் கடத்தல்காரர்களை நிற்குமாறு அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் சரணடையும்படியும் உத்தரவிட்டனர்.
பலமுறை வேண்டுகோள் விடுத்தும் கடத்தல்காரர்கள் கேட்கவில்லை. இதையடுத்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் வானில் சுட்டனர் அதிரடிப்படையினர். அப்போதும் கடத்தல்காரர்கள் கேட்கவில்லை. மாறாக, 80க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்கள் போலீஸாரைத் தாக்கத் தொடங்கினர். கற்களையும் வீசித் தாக்கினர். குச்சிகளை எடுத்து அடிக்க வந்தனர். பலர் கோடாலிகளால் வெட்டவும் வந்தனர். அவர்களை சமாளிக்க முயன்ற போலீஸ் படையினர் வேறு வழியில்லாமல் துப்பாக்கிகளால் சுட நேரிட்டது.
கடந்த பல வருடங்களாகவே சேஷாசலம் பகுதியில் செம்மரக் கடத்தல் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்த கடத்தல் காரணமாக பெரும் பொருளாதார இழப்பு மாநில அரசுக்கு ஏர்பட்டு வருகிறது. எனவே செம்மர வளத்தைக் காக்க சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது என்று ஆந்திர அரசு கூறியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications