திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக திருவண்ணாமலைச் சேர்ந்த இருவர் கைது! - வீடியோ
திருப்பதி வனப்பகுதியில் செம்மரத்தை வெட்டிக் கடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கருணாகரன், முருகன் ஆகிய இருவரும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள்.
திருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேரை ஆந்திராவின் செம்மர கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
திருப்பதி வனப்பகுதியில் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் செம்மரத்தை வெட்டி கடத்துவதாகத் தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. செம்மரம் கடத்தியதாக 19 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து தமிழகத்தைச் சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பதி வனப்பகுதியில் நேற்று பத்துக்கும் மேற்பட்டவர்கள் செம்மரங்களைக் கடத்தும்போது, போலீஸார் வந்ததால், தப்பித்து ஓட முயன்றுள்ளனர். அப்போது இருவரை செம்மரக் கடத்தல் தடுப்பு போலீஸ் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும், திருவண்ணாமலைச் சேர்ந்த முருகன் மற்றும் கருணாகரன் ஆவர். தப்பித்து ஓடிய மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
செம்மரம் கடத்தியதாக கூலித் தொழிலாளர்களையே கைது செய்யும் ஆந்திர போலீஸார் இந்த மாபியாவில் ஈடுபட்டிருக்கும் பெரும் பணக்கார்களை ஏன் பிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில்லை என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டாலும், கூலித் தொழிலாளர்கள் மட்டுமே திரும்பத் திரும்ப கைது செய்யப்படுகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications