செம்மரம் வெட்டியதாக 126 தமிழர்கள் கைது.. ஆந்திர சிறையில் அடைப்பு
செம்மரம் வெட்டியதாக இரண்டு நாட்களில் 126 தமிழர்கள் கைது செய்யப்பட்டு ஆந்திர சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடப்பா: செம்மரம் வெட்டியதாக இரண்டு நாட்களில் 126 தமிழர்கள் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்துவதாக ஆந்திரக் காவல்துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செம்மரங்கள் கடத்தி வந்த 3 வாகனங்கள் மற்றும் 24 செம்மரங்கள் ஆகியவற்றை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த 43 பேரை நேற்று ஆந்திர போலீசார் கைது செய்தனர்.

நேற்று முதல் நாள்தான் செம்மரங்களை கடத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 83 பேர் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்றும் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆக, 2 நாட்களில் 126 பேரை ஆந்திர போலீசார் கைது செய்திருப்பது தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 126 பேரும், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் மைதுகூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் சிறை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, செம்மரக்கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஜாமீன் வழங்காமல் ஆந்திர நீதிமன்றம் இழுத்தடித்து வரும் நிலையில், மீண்டும் 126 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தமிழகத்தில கவலையை ஏற்படுத்தியுள்ளது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications