செம்மரம் வெட்டியதாக 126 தமிழர்கள் கைது.. ஆந்திர சிறையில் அடைப்பு
செம்மரம் வெட்டியதாக இரண்டு நாட்களில் 126 தமிழர்கள் கைது செய்யப்பட்டு ஆந்திர சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடப்பா: செம்மரம் வெட்டியதாக இரண்டு நாட்களில் 126 தமிழர்கள் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்துவதாக ஆந்திரக் காவல்துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செம்மரங்கள் கடத்தி வந்த 3 வாகனங்கள் மற்றும் 24 செம்மரங்கள் ஆகியவற்றை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த 43 பேரை நேற்று ஆந்திர போலீசார் கைது செய்தனர்.

நேற்று முதல் நாள்தான் செம்மரங்களை கடத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 83 பேர் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்றும் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆக, 2 நாட்களில் 126 பேரை ஆந்திர போலீசார் கைது செய்திருப்பது தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 126 பேரும், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் மைதுகூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் சிறை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, செம்மரக்கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஜாமீன் வழங்காமல் ஆந்திர நீதிமன்றம் இழுத்தடித்து வரும் நிலையில், மீண்டும் 126 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தமிழகத்தில கவலையை ஏற்படுத்தியுள்ளது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications