வாடிக்கையாளர்கள் குஷி.. ஜியோ இலவச சேவை அடுத்த வருடம் மார்ச் வரை தொடர வாய்ப்பு!
மும்பை: ஜியோ வழங்கிவரும் இலவச சேவையை மார்ச் மாதம்வரை நீட்டிக்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செப்டம்பர் 5ம் தேதி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது சிம் கார்டுகளை வினியோகிக்க ஆரம்பித்தது. சுமார் 90 சதவீதம் செல்போன் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பது முகேஷ் அம்பானியின் அறிவிப்பாக இருந்தது.

எனவே இணையதளம், தொலைபேசி அழைப்புகள் அனைத்தையும் இலவசமாக வழங்கியது ஜியோ. டிசம்பர் மாத இறுதியோடு இலவச சேவை முடிவடையும் என அறிவிக்கப்பட்டது. எனவே முந்தியடித்து சிம் கார்டை வாங்கினர் மக்கள். தமிழகத்தில் மட்டும் 11 லட்சம் பேர் அதற்குள்ளாக ஜியோ சிம் கார்டை வாங்கிவிட்டனர்.
இந்நிலையில், இலவச சலுகையை அடுத்த ஆண்டு மார்ச் இறுதி வரை நீடிக்க ஜியோ திட்டமிட்டுள்ளது. அறிவிப்பு விரைவில் வெளியாகும். இன்னும் அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதோடு, இருக்கும் வாடிக்கையாளர்களை இலவசம் காண்பித்து கட்டி வைத்துக்கொள்வது இதன் நோக்கம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் டிசம்பர் 3ம் தேதிக்குள் ஜியோ சிம் வாங்குவோருக்குதான் இந்த சலுகை கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications