Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: அரசு வக்கீல் நீக்க உத்தரவு ரத்து! நீதிபதி பணி நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

Relief for Jaya: SC sets aside order to replace prosecutor in DA case
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்கி கர்நாடகா அரசு பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பணி நீட்டிப்பு வழங்குவது குறித்து கர்நாடக அரசு மற்றும் உயர்நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

1991-96ஆம் ஆண்டு காலத்தில் தமிழக முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பல ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அரசு வழக்கறிஞரான பவானிசிங்கை நீக்கி கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்தார். மேலும் இன்றுடன் ஓய்வு பெறும் நீதிபதி பாலகிருஷ்ணாவே தொடர்ந்து வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்கவும் ஜெயலலிதா கோரியிருந்தார்.

இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சவுகான், பாப்டே ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பவானிசிங்கை நீக்கி கர்நாடகா அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் ஓய்வு பெறும் நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பணி நீட்டிப்பு வழங்குவது குறித்து கர்நாடகா அரசு பரிசீலிக்க வேண்டும். இது தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் மாநில அரசு ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+