ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: அரசு வக்கீல் நீக்க உத்தரவு ரத்து! நீதிபதி பணி நீட்டிப்பு

1991-96ஆம் ஆண்டு காலத்தில் தமிழக முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பல ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அரசு வழக்கறிஞரான பவானிசிங்கை நீக்கி கர்நாடகா அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்தார். மேலும் இன்றுடன் ஓய்வு பெறும் நீதிபதி பாலகிருஷ்ணாவே தொடர்ந்து வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்கவும் ஜெயலலிதா கோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சவுகான், பாப்டே ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பவானிசிங்கை நீக்கி கர்நாடகா அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் ஓய்வு பெறும் நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பணி நீட்டிப்பு வழங்குவது குறித்து கர்நாடகா அரசு பரிசீலிக்க வேண்டும். இது தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் மாநில அரசு ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications