மேகாலயா மாநிலத்திலும் வெடித்தது இடஒதுக்கீடு சர்ச்சை- புதிய நியமனங்கள் அனைத்துக்கும் அதிரடி தடை!
ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் இடஒதுக்கீடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் புதிய அரசு நியமனங்கள் அனைத்தையும் அம்மாநில அரசு நிறுத்துவதாக அறிவித்துள்ளது. முன்னதாக இடஒதுக்கீடு கொள்கையை மறு ஆய்வு செய்யவும் ஒரு குழுவை மேகாலயா மாநில அரசு அமைத்துள்ளது.
மணிப்பூர் வன்முறை: நாட்டின் பல மாநிலங்களில் இடஒதுக்கீடு விவகாரம் நீறுபூத்த நெருப்பாக உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், பழங்குடிகள் பட்டியலில் மைத்தேயி இன மக்களை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து குக்கி, நாகா இனமக்கள் போராட்டம் நடத்தினர். இதில் குக்கி இனமக்கள் தீவிரமாக போராட்டத்தில் குதித்தனர். இது மிகப் பெரும் வன்முறையாக வெடித்தது. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை வெடித்து அம்மாநிலமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஒரு மாத காலமாகியும் மணிப்பூர் வன்முறைகள் ஓயவில்லை. இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். நாட்டின் ராணுவ தளபதிகள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் மணிப்பூரில் முகாமிட்டு அமைதி முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போது மணிப்பூரை தொடர்ந்து மற்றொரு வடகிழக்கு மாநிலமான மேகாலயாவிலும் இடஒதுக்கீடு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேகாலயா மாநிலத்தில் தற்போது காசி-ஜயந்தியா இனத்தவருக்கு 40%; காரோ இனக்குழுவுக்கு 40%; இதர பழங்குடிகளுக்கு 5%; பொது பிரிவினருக்கு 15% என இடஒதுக்கீடு கொள்கை கடைபிடிக்கிறது. இந்த இடஒதுக்கீடு கொள்கையை மறு ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் என்பது கோரிக்கை. அதாவது காசி இனக்குழுவினர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் தற்போதைய இடஒதுக்கீட்டு கொள்கையை மறுசீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி விபிபி -VPP கட்சி பொதுச்செயலாளர் Basaiawmoit சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். இதனைத் தொடர்ந்து மேகாலயா மாநில அரசு, இடஒதுக்கீடு கொள்கையை மறு ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து புதியதாக எந்த நியமனங்களையும் மேற்கொள்ளவும் மேகாலயா மாநில அரசு தடை விதித்து புதிய சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இருந்த போது மேகாலயா மாநில அரசின் இந்த நடவடிக்கைகள் மீது VPP கட்சி இன்னமும் நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications