வெளிநாட்டில் நிதி பெற மத போதகர் ஜாகீர் நாயக்கின் அறக்கட்டளைக்கு புதிய கட்டுப்பாடு
மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வரும் ஜாகீன் நாயக்கின் அறக்கட்டளை வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஜாகீன் நாயக்கின் கல்வி அறக்கட்டளை வெளிநாடுகளில் இருந்து ஒவ்வொரு முறையும் நன்கொடை பெறுவதற்கு முன்னர் மத்திய உள்துறையிடம் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் (ஐஆர்எப்) கல்வி அறக்கட்டளை, 'பீஸ் டிவி' ஆகிய வற்றை நிறுவியுள்ளார். இவர் தீவிர வாதத்தை தூண்டும் வகையில் மதப் பிரச்சாரம் செய்கிறார்.

பிற மதங்களை இழிவுப் படுத்தி, முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளாக மாற வேண்டும் என்று சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருவதாக ஜாகீர் நாயக் மீது சரமாரியாக புகார்கள் எழுந்துள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய புலனாய்வு நிறுவனங்களும் ஜாகீர் நாயக், அவரது அமைப்புகள், பீஸ் டிவி குறித்து தொடர்ந்து கண்காணித்து மத்திய அரசுக்குப் பல்வேறு தகவல்களை அனுப்பி உள்ளன.
அதன் அடிப்படையில்இ ஜாகீர் நாயக்கின் ஐஆர்எப் அமைப்பை தடை செய்வதற்கான நடவடிக் கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இதுதொடர்பான கடைசி நோட்டீஸும் அனுப்பப் பட்டுள்ளது.
தீவிரவாதத்தை தூண்டி வருகிறார் என்பது உட்பட பல குற்றச்சாட்டுகள் எழுந்தபோது ஜாகீர் நாயக் வெளிநாட்டில் இருந்தார். தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால், இந்தியா வந்தால் கைது செய்யப்படுவோம் என்ற எண்ணத்தில் அவர் நாடு திரும்பாமல் உள்ளார்.
இந்நிலையில். அவரது ஐஆர்எப் கல்வி அறக் கட்டளையை முன் அனுமதி பெறும் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது. இது குறித்த அறிவிப்பாணையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் இருந்து ஒவ்வொரு முறை அன்பளிப்பு தொகை பெறுவதற்கு முன்னர் மத்திய உள்துறையிடம் கல்வி அறக்கட்டளை அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பாணையில், ''வெளிநாட்டு அன்பளிப்பு கட்டுப்பாடுகள் சட்டத்தை (எப்சிஆர்ஏ) ஐஆர்எப் கல்வி அறக்கட்டளை மீறி செயல்பட்டுள்ளது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
அறக்கட்டளைக்கு வந்த பணத்தை, பீஸ் தொலைக்காட்சிக்கு மாற்றி பயன்படுத்தி உள்ளனர். அதில் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் ஜாகீர் நாயக் பேசியுள்ளார். எனவே, வெளிநாட்டு நன்கொடைகளை பெறுவதற்கு முன்னர் மத்திய அரசிடம் முன் அனுமதி பெறுவது அந்த கல்வி அறக்கட்டளைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications