ஓட்டுக்கு இடது... நோட்டுக்கு வலது!
இடைத்தேர்தலையொட்டி வங்கிகளில் பணம் மாற்றுபவர்களின் வலது கையில் அழியாத மை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவர்களின் வலது கையில் மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒரே நபர் மீண்டும் மீண்டும் பணம் மாற்றுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு ஒரு வாரமாகியும் அவற்றை வங்கிகளில் மாற்ற முடியாததால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வங்கிகளிலும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஏடிஎம்களும் சரிவர இயங்காததால் அன்றாட செலவுக்கு கூட மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். நிலைமையை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்களை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பணம் மாற்றுவோர்கள் கையில் மை வைக்கப்படும் என மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் இன்று அறிவித்தார். அதன்படி வலது கை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நான்கு தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் வங்கிகளில் பணம் மாற்றுபவர்களின் வலது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு இடது கையில் அழியாத மை வைக்கப்படுவது வழக்கம்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications