251 ரூபாய் ஸ்மார்ட் போன் புக்கிங் திடீர் நிறுத்தம்
டெல்லி: உலகின் மிகக்குறைந்த விலையிலான ஸ்மார்ட் போன் என்ற அறிமுகத்தோடு வெளியான ரிங்கிங் பெல் நிறுவன செல்போனின் முன்பதிவு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
ப்ரீடம் 251 என்ற பில்டப்போடு ரிங்கிங் பெல் என்ற நொய்டாவை சேர்ந்த நிறுவனம், ரூ.251க்கு ஸ்மார்ட் போன் தருவதாக அறிவித்தது.

இந்த போனிற்கான முன்பதிவு, பி்ப்ரவரி 17ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த குறைந்தவிலை ஸ்மார்ட்போனுக்கு அதிக வரவேற்பு இருந்தது. காலை 6 மணிக்கெல்லாம் மொத்தமாக புக் செய்ய வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டியதால், வெப்சைட்டே ஜாம் ஆனது.
இரண்டாவது நாளான நேற்றும், இணையதளம் முடங்கியதால், முன்பதிவு பாதிக்கப்பட்டது. இதனிடையே, சீன நிறுவனமான ஆட்காம் ஐகான் 4 ஸ்மார்ட்போனின் மறுபதிப்பாக இந்த ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் உள்ளதாகவும், இந்த விலை குறைப்பிற்கு பல்வேறு தரப்புகளில் எதிர்ப்புகள் கிளம்பியதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, ப்ரீடம் 251 ஸ்மார்ட்போனின் முன்பதிவு மற்றும் விற்பனை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 5 கோடி பேர் ஏற்கனவே போனை புக் செய்துவிட்ட நிலையில், இதற்கு மேலும் சப்ளை செய்வது கஷ்டம் என்பதால் புக்கிங்கை நிறுத்திவிட்டதாக தெரிகிறது. ஏற்கனவே புக் செய்தவர்களுக்கு ஜூன் 30ம் தேதிக்குள் கூரியர் மூலம், போன் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications