'நாகா' நாய்கறி பிரியர்களிடம் சிக்கி படாதபாடு படும் அமைச்சர் மேனகா காந்தி
வடகிழக்கு மாநிலங்களில் விஸ்வரூபமெடுத்துள்ளது நாய் கடத்தல் தொழில். இதில் பிராணிகள் நலனுக்காக போராடும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி என்ன நடவடிக்கை எடுப்பார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் நாய்கறி விவகாரம் புதிய வகையில் 'கடத்தலாக' விஸ்வரூபமெடுத்து வருகிறது. ஏற்கனவே நாய்கறி சாப்பிட தடை விதிக்க கோரி தொடர்ந்து குரல் கொடுத்துவரும் பிராணிகள் நல ஆர்வலரான மத்திய அமைச்சர் மேனகா காந்தி இந்த நாய்கள் கடத்தல் விவகாரத்தை எப்படி கையாள்வார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகாலாந்து மக்கள் நாய்க்கறி பிரியர்கள்... நாய்க்கறிதான் அவர்களது உயர்வான அசைவ உணவு. நாகாலாந்து ஹோட்டல்களில் விதம் விதமான நாய்க்கறி டிஷ்களை பார்க்கவும் முடியும்.
அதேநேரத்தில் கறிக்காக நாய்களை அவர்கள் கொல்லும் விதம் படுகொடூரமானது. இதில் பெரிய விநோதமே நாகாலாந்தில் நாய்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. கண்ணில் நாய் சிக்கினாலே கறிதான் என்கிறபோது அம்மாநிலத்தில் தட்டுப்பாடு வரத்தானே செய்யும்.

நாய் கடத்தல் தொழில்
இதனால் வடகிழக்கு மாநிலங்களில் 'நாய் கடத்தல் தொழில்' களைகட்டத் தொடங்கியது. இது தற்போது விஸ்வரூமபெடுத்து உள்ளது. அஸ்ஸாமில் இருந்து நாகாலாந்துக்கு கடத்தி செல்லப்பட்ட 75 நாய்கள் ஒரு வேனில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

ஒரு நாய்க்கு ரூ300
இதில் 25 நாய்கள் மூச்சு திணறி இறந்துவிட்டன. ஒரு நாயை பிடித்து கொடுத்தால் ரூ300 முதல் ரூ500 வரை தருகிறார்கள். நாகாலாந்தில் ஒரு கிலோ நாய்க்கறி விலையே ரூ300 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாய்க்கறிக்கு நாகாலாந்தில் செம டிமாண்ட்.

மேனகா முயற்சி
ஏற்கனவே நாய்க்கறியை சாப்பிட தடை விதிக்க வேண்டும் என போராடிப் பார்த்தவர் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. ஆனால் நாகாலாந்து மக்களோ, நாய்க்கறியில் சத்து அதிகம் உள்ளது. எங்களது பண்பாட்டுடன் இணைந்தது. அதை கைவிட முடியாது என பதிலடி கொடுத்தனர்.

புதிய பிரச்சனை
இப்போது புதிய சமூக பிரச்சனையாக நாய் கடத்தல் தொழில் விஸ்வரூபமெடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனை எப்படி மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் பீட்டாவும் தடுக்கப் போகிறது என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பு.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications