பச்சோரி மீதான பாலியல் புகார் உண்மைதான்... டெல்லி போலீஸ் குற்றப்பத்திரிகை
டெல்லி: தேரி அமைப்பின் துணை தலைவர் ஆர்.கே. பச்சோரி மீதான பாலியல் வழக்கில் 500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை டெல்லி போலீசார் தாக்கல் செய்ய உள்ளனர்.
ஐ.நா. பருவநிலை மாற்ற குழுவின்(ஐபிசிசி) தலைவராக இருந்தவர் ஆர்.கே. பச்சோரி(75). அவர் எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவன(டிஇஆர்ஐ) தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29 வயது பெண் ஒருவர் பச்சோரி மீது டெல்லி போலீசில் பாலியல் புகார் அளித்தார்.
தான் தேரி அமைப்பில் 2013ம் ஆண்டு சேர்ந்ததில் இருந்து பச்சோரி தனக்கு பாலியல் தொல்லை அளித்தார், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்ஆப் மூலம் ஆபாசமாக மெசேஜ் அனுப்பினார் என்று தனது புகாரில் அந்த பெண் தெரிவித்திருந்தார். இதையடுத்து போலீசார் பச்சோரி மீது பாலியல் தொல்லை அளித்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.

பதவி விலகல்
பாலியல் வழக்கில் முன்ஜாமீன் பெற்ற பச்சோரி ஐபிசிசி தலைவர் மற்றும் தேரி அமைப்பின் தலைவர் பதவிகளில் இருந்து விலகினார். இந்நிலையில் அண்மையில் தேரி அமைப்பில் துணை தலைவர் பதவி ஒன்றை உருவாக்கினர். அந்த பதவி பச்சோரிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கை
பச்சோரி மீதான பாலியல் தொல்லை வழக்கில் 500 பக்க குற்றப்பத்திரிக்கையை டெல்லி போலீசார் தயார் செய்துள்ளனர். அவர் தேரி அமைப்பின் தலைவராக இருக்கையில் அந்த பதவியை தவறாக பயன்படுத்தியதற்கான போதிய ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

பச்சோரி
2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பச்சோரி அந்த பெண்ணை 34 முறை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். மேலும் அவர் 2013ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை அந்த பெண்ணுக்கு 6 ஆயிரம் எஸ்.எம்.எஸ்.கள் மற்றும் வாட்ஸ்ஆப் மெசேஜ்கள் அனுப்பி வைத்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்ட இடத்தில்
நான் தேரியில் பணியாற்றியபோது பச்சோரி என்னிடம் அசிங்கமாக பேசியதுடன், கண்ட இடத்தில் என்னை தொட்டார், கட்டுப்பிடித்து முத்தம் கொடுத்தார். எனக்கு நேர்ந்த கொடுமை போன்று உலகில் வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என்று பச்சோரி மீது புகார் அளித்த பெண் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications