Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேரடி அரசியலுக்கு வருகிறாரா பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா? அவரே சொன்ன தகவல்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: அமேதி தொகுதியில் தற்போது எம்பியாக இருக்கும் ஸ்மிரிதி இரானி செயல்பாடு காரணமாக மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், காந்தி குடும்பத்தை சேர்ந்தவர் மீண்டும் எம்பியாக வர வேண்டும் என அவர்கள் விரும்புகிறர்கள் என்றும் ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் அமேதி, ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கியது. இந்திரா காந்தி காலம் தொடங்கி ராகுல் காந்தி காலம் வரை அங்கு காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்றது. அமேதி தொகுதியில் 2004, 2009 மற்றும் 2014 ஆகிய தேர்தல்களில் ராகுல் காந்தி வெற்றி பெர்றார்.

Robert Vadra says people of Amethi wants member of the Gandhi family to return to represent them

ஆனால் கடந்த 2019 தேர்தலில் அவர் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். எனினும் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டதால் எம்பியானர். இந்த ஆண்டு அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வயநாடு தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதனால் அமேதியில் ஸ்மிருதி இரானியை எதிர்த்து நிற்கப்போகும் வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரேபரேலி தொகுதி எம்பியான சோனியா காந்தி, லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல், ராஜ்யசபா உறுப்பினராகியுள்ளார். இதனால் அவரது ரேபரேலியில் பிரியங்கா போட்டியிடுகிறார்.

இதன் காரணமாக அமேதி தொகுதியில் தற்போது காந்தி குடும்பத்தில் ஆக்டிவாக இருக்கும் யாரும் போட்டியிடுவது இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், பிரியங்கா கணவரான ராபர்ட் வதேரா, அமேதி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ராபர்ட் வதேரா கூறியிருப்பதவது:-

ரேபரேலி, சுல்தான்பூர் மற்றும் அமேதி ஆகிய தொகுதிகளில் பல ஆண்டுகளாக காந்தி குடும்பத்தினர் தீவிர மக்கள் பணியாற்றினர். ஆனால் இப்போதைய எம்பியால் மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். ஸ்மிரிதி ராணியை தேர்வு செய்தது தவறு என்று அமேதி மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். தொகுதியின் வளர்ச்சி பற்றி ஸ்மிரிதி ராணி சிந்திக்கவில்லை.

காந்தி குடும்பத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். நான் அரசியலில் இறங்கினால் அமேதியை தேர்வு செய்ய வேண்டும் என்று அமேதி மக்களிடம் இருந்து எனக்கு கோரிக்கை வந்தது. எனது முதல் அரசியல் பிரச்சாரம் கூட அமேதியில் இருந்தே தொடங்கியது.

பிரியங்கா உடன் 1999-ல் அமேதியில் பிரச்சாரம் மேற்கொண்டது நன்றாக நினைவில் இருக்கிறது. நாங்கள் மேற்கொண்ட உழைப்பை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் தொகுதி மக்கள் என்னுடன் தொடர்பில் உள்ளார்கள். எனது அலுவலகத்தின் வெளியே என்னை சந்திக்கிறார்கள். எனது பிறந்த நாளை கொண்டடுகிறன்றனர். இவ்வாறு அவர் கூறினார். இதன் மூலம் அவர் அமேதி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+