திருமணத்திற்கு விடுப்பு மறுப்பு ... துப்பாக்கியால் சுட்டு ரயில்வே போலீஸ் தற்கொலை!
திருமணத்திற்கு போதுமான விடுமுறை கொடுக்காததால் மனமுடைந்த ரயில்வே போலீஸ் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மும்பை : திருமணத்திற்கு போதுமான விடுமுறை கொடுக்காததால், மனமுடைந்த ரயில்வே போலீஸ் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் அரங்கேறியுள்ளது.
23 வயதான தல்வீர் சிங் மும்பை செண்ட்ரல் ரயில்வே நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு அடுத்த வாரத்தில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதனால் ரயில் நிலையத்தின் மேலாளரிடம் விடுமுறை கேட்டுள்ளார் தல்வீர் சிங். அதற்கு வெறும் 5 நாள் மட்டும் விடுப்பு வழங்கப்பட்டது.

இதன் காரணமாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினார் தல்வீர் சிங். விடுப்பு வழங்கப்பட்டது குறித்து மிக கவலையுடன் அவர் பேசி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 4ம் தேதி ரயில்வே பணி கட்டுபாட்டு அறையில் தன் தோளில் இருந்த ஏகே 47 துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தல்வீர் சிங் தற்கொலை தொடர்பாக மும்பை மத்திய ரயில்வே போலீஸ், குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 174-ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications