ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் புதிய ஒரு ரூபாய் நோட்டுக்கள்... வாங்குபவர்கள் ‘பதுக்குவதாக’ புகார்
டெல்லி: புதிய ஒரு ரூபாய் நோட்டுகளை ஆன்லைனில் அதிக விலை கொடுத்து வாங்குபவர்கள், அவற்றைப் புழக்கத்தில் விடாமல் பதுக்கி விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ. 1.14 காசு செலவு செய்யப்படுகிறது. எனவே, கடந்த 1994ம் ஆண்டு முதல் ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தப்பட்டு, அதற்குப் பதில் நாணயங்களை புழக்கத்தில் விடப்பட்டது. இதே போன்று, செலவுகளைக் குறைக்கும் வகையில் 2 மற்றும் 5 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு தொடக்கத்தில் மீண்டும் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த ரூபாய் நோட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆன்லைனில் இவை ஒரு நோட்டு ரூ. 100 வரை விற்கப்படுகிறது.
ஆனால், இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஆன்லைனில் கூடுதல் விலை கொடுத்து இந்தப் புதிய ஒரு ரூபாய் நோட்டுகளை வாங்குபவர்கள் அவற்றைப் புழக்கத்தில் விடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அவற்றைப் பதுக்கி வைத்து பின்னாளில் கூடுதல் விலைக்கு விற்க முயற்சிப்பார்கள் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
எனவே, இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
-
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications