ஆக்சிஸ் வங்கி கிளையில் 100 கோடி ரூபாய் கருப்புப் பணம் மாற்றம்.. ஐ.டி. ரெய்டில் அம்பலம் !
டெல்லியில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதன நடத்தினர்.
டெல்லி: டெல்லியில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளை ஒன்றில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக 100 கோடி ரூபாய் மாற்றப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
பிரதமர் மோடி நவம்பர் 8 ஆம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்த நிலையில் கருப்புப் பணத்தை கருப்பு பண முதலைகள் அந்த பணத்தை வெள்ளையாக மாற்ற முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு வங்கி அதிகாரிகளும் துணை புரிவதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் சோதனையில் வங்கி அதிகாரிகள் மூலமாக சில கருப்பு பண முதலைகள் பணத்தை மாற்றி வருவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டெல்லியில் உள்ள சாந்தினி சவுக் ஆக்சிஸ் வங்கி கிளையில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதைடுத்து அந்த வங்கியில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர் போலி ஆவணங்கள் மூலம் 44 புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த கணக்குகளில் சுமார் 100 கோடி ரூபாய் வரை விதிமுறைகளை மீறி பணப்பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்தது. அந்த ஒரு கிளையில் மட்டும் சுமார் 450 கோடி ரூபாய் வரை பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சாந்தினி சவுக் ஆக்சிஸ் வங்கி கிளை மேலாளரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூபாய் நோட்டு விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஏற்கனவே ஆக்சிஸ் வங்கி நாடு முழுவதும் தனது 19 ஊழியர்களை இடைநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications