கலைஞர் டிவிக்கு வந்த ரூ.200 கோடி: தயாளு அம்மாளை விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
டெல்லி: 2ஜி விவகாரத்தில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி முறைகேடாக வந்தது குறித்து அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் இருந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தது.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

செல்வி மனு தாக்கல்
இந்நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து தயாளு அம்மாளை விடுவிக்கக் கோரி அவரது மகள் செல்வி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உச்சநீதிமன்றம் தள்ளுபடி
இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் இருந்து தயாளு அம்மாளை விடுவிக்க மறுத்ததோடு, செல்வி மனுவை தள்ளுபடி செய்தது.

சாட்சியாக சேர்ப்பு
ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு முறைகேடாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது; இதற்கு ஆதாயமாக கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி பணம் கைமாறியது என்பது சிபிஐ புகார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில் கலைஞர் டிவியின் பங்குதாரர்களில் ஒருவரான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டார்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்
அதே நேரத்தில் கலைஞர் டிவிக்கு பணம் கைமாறிய விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு (Enforcement Directorate), அன்னிய செலாவணி மோசடி பிரிவின் கீழ் தனியே ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உட்பட 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

விடுவிக்க மனு
வயோதிகம் காரணமாக ஞாபகசக்தி குறைபாடு ஏற்பட்டுள்ளதால் வழக்கில் இருந்தே தன்னை விடுவிக்க வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றத்தில் தயாளு அம்மாள் மனு தாக்கல் செய்த மனுவை கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

தள்ளுபடி மேல் தள்ளுபடி
தற்போது உச்சநீதிமன்றமும் தயாளு அம்மாளை விடுவிக்க மறுத்துவிட்டதால் அவர் விரைவில் வழக்கையும், கைது நடவடிக்கையும் சந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications