வயது மூத்த விவசாயிகளுக்கு மாதம் ரூ. 5,000 ஓய்வூதியம்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
பாட்னா: நாட்டில் உள்ள வயது மூத்த விவசாயிகளுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பாட்னாவில் நடந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் பாஜகவின் பேரணி நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ரூ. 5 ஆயிரத்தை ஓய்வூதியமாக வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
விவசாயிகளின் நலனில் உண்மையிலேயே அக்கறை எடுத்துக் கொண்ட முதல் கட்சி பாஜக தான் என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது.
60 வயதில் விவசாயிகளுக்கு கடினமான பணிகளைச் செய்யும் திறன் குறைந்து போகும். அதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு இந்த ஓய்வூதியம் வழங்கப் படுகிறது' என்றார்.












Click it and Unblock the Notifications