பேங்க் வாசலில் துப்பாக்கி முனையில் ரூ.91 லட்சம் கொள்ளை- உபியில் துணிகரம்!
லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வங்கி வாசலில் துப்பாக்கி முனையில் ரூபாய் 91 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், பிஜ்னோர் மாவட்டத்தின் தாம்பூர் பகுதியில் இருக்கும் கலாகர் சாலையில் அரசுக்கு சொந்தமான தேசியமயமாக்கப்பட்ட அந்த வங்கியில் இருந்து பணத்தை கருவூலத்துக்கு ஏற்றிச் செல்லும் பாதுகாப்பு வேனின் டிரைவரும், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலரும் நேற்று மாலை வழக்கம்போல் பணப்பெட்டியுடன் வெளியே வந்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களை நெருங்கிய இரு வாலிபர்கள், வேன் டிரைவர் சுமித், பாதுகாவலர் தயாராம் ஆகியோரை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதில் அவர்கள் இருவரும் சுருண்டு கீழே விழுந்தனர். அருகாமையில் கிடந்த பணப்பெட்டியை கைப்பற்றிய கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
அந்தப் பெட்டியில் ரூபாய் 91 லட்சம் ரூபாய் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பணப்பெட்டியுடன் தப்பிச்சென்ற இரு வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications