தமிழகம், கேரளாவில் ஜிகாதிகள் நடவடிக்கை அதிகரிப்பு: சொல்வது மோகன் பகவத்
நாக்பூர்: தமிழகம் மற்றும் கேரளாவில் ஜிகாதிகள் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் குற்றம்சாட்டியுள்ளார்.
விஜயதசமியையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசினார். இந்தப் பேச்சு அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பானது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அந்த உரையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை மோகன் பகவத் வெகுவாக பாராட்டினார். மோடி அரசு சரியான பாதையில் செல்வதாகவும் மோகன் பகவத் பேசினார்.
அத்துடன் தமிழகம் மற்றும் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கொல்லப்பட்ட வழக்குகளில் விசாரணை மெதுவாகவே நடைபெற்று வருகிறது என்றும் இரு மாநிலங்களிலும் இஸ்லாமிய ஜிகாதிகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன என்றும் மோகன் பகவத் குற்றம்சாட்டியுள்ளார். மோகன் பகவத்தின் இப்பேச்சும் கடும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications