உ.பி. சட்டசபைக்குள் வெடித்தது கலவரம்.. முதல் கூட்டத் தொடரிலே எதிர்க் கட்சிகள் பெரும் ரகளை !
உத்தரப் பிரதேச முதல்வராக யோகி ஆதித்யாநாத் பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் சட்டப் பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ரகளையில் ஈடுபட்டனர்.
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பிறகு, இன்று நடைபெற்ற முதல் சட்டசபை கூட்டத் தொடரில் எதிர்க் கட்சிகள் பெரும் ரகளையில் ஈடுபட்டன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து அம்மாநில சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ராம் நாயக்கின் உரையுடன் இன்று தொடங்கியது.

அப்போது மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக குற்றம்சாட்டிய, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திடீரென அமளியில் ஈடுபட்டனர். மேலும், ஆளுநரின் இருக்கையை முற்றுகையிட்ட எதிர்க்கட்சியினர், காகிதங்களை சுருட்டி அவரை நோக்கி வீசியெறிந்தனர். அதை சபைக் காவலர்கள் தடுத்தனர். பேனர், பதாகைகளை கைகளில் ஏந்தியும் அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சல் இட்டனர்.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை கூட்டம் பாஜக தலைமையிலான அரசு ஆட்சியை பிடித்த பிறகு, முதல் முதலாக தூர்தர்ஷனில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த காட்சிகள் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பான நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என ஆளுநர் எச்சரித்தார். எனினும், அவரது கோரிக்கையை கண்டுகொள்ளாத உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையில் பெரும் குழப்பம் நிலவியது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications