டெல்லியில் ரஷிய துணை பிரதமர்- சுஷ்மா ஸ்வராஜூடன் பேச்சுவார்த்தை!
டெல்லி: ரஷிய துணை பிரதமர் டிமித்ரி ஓ ரோகோசின் இன்று டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
ரஷிய துணை பிரதமர் டிமித்ரி ஓ ரோகோசின் 2 நாட்கள் பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். நரேந்திர மோடி அரசு பதவி ஏற்ற பிறகு ரஷிய தலைவர் ஒருவர் வருவது இதுவே முதல்முறை ஆகும்.
டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை டிமித்ரி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியை நாளை டிமித்ரி சந்தித்து பேசுகிறார். பாகிஸ்தானுக்கு மி-35 ரக தாக்குதல் நடத்தும் ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய ரஷியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கு இந்திய தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட இருக்கிறது.
மேலும் கூடங்குளத்தில் 3-வது மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பது தொடர்பாக இந்த ஆலோசனைகளில் விவாதிக்கப்பட இருக்கிறது.