ராகுலின் இங்கிலாந்து குடியுரிமை விவகாரம்... உள்துறை அமைச்சகத்துக்கு சு.சுவாமி கடிதம்
ராகுல் காந்தியின் இங்கிலாந்து குடியுரிமை விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள பேக்உப்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இங்கிலாந்து குடிமகன் என்று ராகுல் காந்தி தன்னை குறிப்பிட்டுள்ளார் என்றும் அவர் ஒரே நேரத்தில் இந்திய குடியுரிமையும் பெற்றுக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதால் அப்பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புகார் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்க ராகுலுக்கு நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் ராகுலின் இரட்டை குடியுரிமை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.
Subramanian Swamy urges Home Ministry to probe into Rahul Gandhi’s secret British citizenship https://t.co/p0rSledDDj via @PGurus1
— Subramanian Swamy (@Swamy39) September 21, 2017
அதில் அவர் குறிப்பிடுகையில், ராகுல் காந்தியின் இங்கிலாந்து குடியுரிமை குறித்து விசாரிக்க வேண்டும். 2003-இல் பதிவான பேக்உப்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இங்கிலாந்து குடிமகன் என ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிறுவனம் 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2009-இல் மூடப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications