சபரிமலை: பம்பை நதியில் நீராட முடியாது.. நீலிமலை, அப்பாச்சி மேடு, சபரி பீடம் வழியேவும் செல்ல முடியாது
பம்பை: சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் பம்பை நதியில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது; வழக்கமான நீலிமலை, அப்பாச்சி மேடு, சபரிபீடம் வழியாகவும் செல்ல முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் கார்த்திகை மாதங்களில் களைகட்டியிருக்கும் சபரிமலை யாத்திரை பெரும் ஏமாற்றத்துக்குரியதாகிவிட்டது. இந்த முறை குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு அனுமதி இல்லை.

கொரோனா பரிசோதனை சான்றிதழ்
கொரோனா பரிசோதனை சான்றிதழுடன்தான் நிலக்கல்லில் இறங்கவே முடியும். அப்படி சான்றிதழ் இல்லை எனில் நிலக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை மையத்தில் கட்டணம் செலுத்தி 30 நிமிடத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பான சான்றிதழைப் பெறலாம்.

பம்பை நீராடலுக்கு தடை
நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு செல்லும் பக்தர்கள், அங்கு நதியில் புனித நீராடிவிட்டுதான் மலையேற தொடங்குவர். ஆனால் இம்முறை பம்பை நதியில் புனித நீராட அனுமதி இல்லை. அதற்கு பதிலாக பம்பை திருவேணியில் தற்காலிக குளியல் அறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

நீலிமலை, அப்பச்சி மேடு பாதை
இதனைத் தொடர்ந்து சபரிமலை யாத்திரை வழக்கமாக நீலிமலை, அப்பச்சி மேடு, சபரிபீடம் வழியாகத்தான் பெரும்பாலான பக்தர்கள் செல்வார்கள். இந்த முறை இந்த வழிப்பாதை அடைக்கப்பட்டு சுப்பிரமணிய பாதை வழியே பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் மலைகளினூடே மேற்கொள்ளப்படும் பெருவழிப் பாதை யாத்திரைக்கும் புல்லுமேடு வழி யாத்திரைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் வருத்தம்
நீலிமலையும் அப்பச்சி மேடும் சபரிபீடமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் நிரம்பி வழியும் காலம் இது. ஆனால் இந்த முறை அந்த சபரிமலை வனப்பாதை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருப்பது ஐயப்ப பக்தர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அதேபோல் ஐயப்ப பக்தர்கள் யாத்திரை என்பது குருசாமி ஒருவரது தலைமையில் இருமுடிகட்டி அவரது வழிகாட்டுதலில் குழு குழுவாக மேற்கொள்ளப்படும் பயணம். ஆனால் கொரோனா காலத்தில் சமூக விலகலை கடைபிடித்தபடி யாத்திரையை மேற்கொள்வதில் பக்தர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளவும் செய்கின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications