”சரணம் ஐய்யப்பா” கோஷத்துடன் குவியும் பக்தர்கள் - தரிசன நேரத்தினை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு!
சபரிமலை: சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தரிசன நேரத்தினை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி நடைதிறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு கடந்த 16 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.
17 ஆம் தேதி முதல் புதிய மேல் சாந்தி சங்கரன் நம்பூதிரி தலைமையில் பூஜை நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக சபரிமலைக்கு ஐய்யப்ப பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. தற்போது மழை சற்று ஓய்ந்து உள்ளது.

அதிகரிக்கும் பக்தர்கள் வருகை:
இதன் காரணமாக சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. நேற்று காலை முதல் சபரிமலை வலிய நடைப்பந்தல், 18 ஆம் படிக்கு கீழ் உள்ள திடல், சன்னிதான பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

சுற்றிலும் ஐய்யப்ப கோஷம்:
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஐய்யப்ப கோஷமிட்டு சாமி அய்யப்பனை பயபக்தியுடன் வழிபட்டனர். இனி வரும் நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால் தரிசன நேரத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆன்லைன் தரிசன முன்பதிவு:
அதாவது காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலையில் 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு வந்தது. தற்போது 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் இனிமேல் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். கேரள போலீசாரால் ஏற்படுத்தப்பட்ட ஆன்லைன் தரிசன முன் பதிவுக்கு இதுவரை 12 லட்சம் பேர் முன் பதிவு செய்து இருக்கிறார்கள்.

வெளிநாட்டு பக்தர்களும் வருகை:
இதில் தமிழ்நாட்டில் இருந்து 5 லட்சத்து 9 ஆயிரம் பேரும், கேரளாவில் இருந்து 2 லட்சத்து 18 ஆயிரம் பேரும், ஆந்திராவில் இருந்து 2 லட்சத்து 1,000 பேரும், தெலுங்கானாவில் இருந்து 65 ஆயிரம் பேரும், கர்நாடகாவில் இருந்து 63 ஆயிரத்து 800 பேரும் முன்பதிவு செய்து உள்ளனர். அமெரிக்கா உள்பட 20 வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆன் லைன் தரிசனத்திற்கு முன் பதிவு செய்து உள்ளனர்.

சிறப்பு கூப்பன் பெற வசதி:
ஆன் லைன் தரிசன முன் பதிவு முற்றிலும் இலவசமாகும். இவ்வாறு முன் பதிவு செய்து வரும் ஐய்யப்ப பக்தர்கள் வழக்கமான பக்தர்களின் வரிசையில் காத்து நிற்காமல், வலிய நடை பந்தலில் உள்ள சிறப்பு வரிசை மூலமாக விரைவில் சாமி தரிசனம் செய்ய முடியும். ஆன் லைன் மூலம் முன் பதிவு செய்து வரும் ஐய்யப்ப பக்தர்கள், பம்பையில் உள்ள சிறப்பு சேவை மையத்தில் முன் பதிவு செய்து, பதிவிறக்கம் மூலம் பெறப்பட்ட சான்று நகலை காட்டி சிறப்பு கூப்பன் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications