சபரிமலை ஐயப்பன் கோயில் தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு.. அடுத்து என்ன?
டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு, சமீபத்தில் சபரிமலை தொடர்பான வழக்கில் வழங்கிய தீர்ப்பில், அனைத்து வயது பெண்களும், சபரிமலையில் வழிபட அனுமதி உண்டு என்று தெரிவித்தனர்.
இந்த தீர்ப்புக்கு கேரள பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நாடு முழுக்கவுமே, பெண்கள் போராட்டங்களை அதிகரித்து வருகிறார்கள்.

அரசியல் சாசனத்திற்கு எதிரானது
இந்த நிலையில்தான், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில், அதன் தலைவர், ஷியாலஜா விஜயன், சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எந்த ஒரு மதத்தின் வழிபாட்டு முறையிலும் தலையிடக் கூடாது என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படை என்பதால் இந்த தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனே தேவை
உடனடியாக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு தீர்ப்பை வழங்க வேண்டும். மேம்போக்காக இந்த உத்தரவை பிறப்பிக்காமல், அறுதியிட்டு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

புதிய தலைமை நீதிபதி
சபரிமலை வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சமீபத்தில் ஓய்வு பெற்றுவிட்டார். இப்போது ரஞ்சன் கோகாய் புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ள நிலையில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்ட வல்லுநர்கள் கருத்து
இதுகுறித்து வழக்கறிஞர் தமிழ் மணி என்பவர் கூறுகையில், ஏற்கனவே உள்ள வழக்கில் பிரதிவாதியாக இல்லாத ஒரு புதிய அமைப்பு வழக்கு தொடர்ந்திருப்பதால், இதை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்குமா என்பது சந்தேகம் என்றார். வழக்கில் பிரதிவாதியாக இருந்த தேவசம் போர்டு, இந்த வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்ய மாட்டோம் என அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications