'வாவ், இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்': சச்சினை செமயாக கலாய்த்த நெட்டிசன்கள்
டெல்லி: ராஜ்யசபா கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.
ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவைக்கு அவ்வளவாக செல்வது இல்லை. இந்நிலையில் அவர் நேற்று அவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கலந்து கொண்டாலும் அவர் கேள்வி எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்தார்.
ராஜினாமா
அவைக்கு வராமல் இருக்கும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பாலிவுட் நடிகை ரேகா ஆகியோர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி எம்.பி. நரேஷ் அகர்வால் தெரிவித்தார். இந்நிலையில் அவைக்கு வந்த சச்சினை நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.
|
அதிசயம்
வாழ்க்கையில் ஒரு முறை தான் நடக்கும் என்று சச்சின் ராஜ்யசபா கூட்டத்திற்கு வந்ததை ட்விட்டரில் ஒருவர் கிண்டல் செய்துள்ளார்.
|
சச்சின்
1. பிடி பீரியட்
2. மற்ற பீரியடுகள்
|
பள்ளி
பள்ளிக்கு புதிதாக சென்று யாரும் உங்கள் அருகில் உட்காராத போது...
|
சாதனை
2017ம் ஆண்டில் இந்தியா இரண்டு சாதனைகள் செய்துள்ளது. ஜிஎஸ்டியை அமல்படுத்தியது மற்றும் இந்த காட்சி...