சச்சினுக்கு பாரதரத்னா விருது பொருத்தமானதுதான்- லதா மங்கேஷ்கர்
மும்பை: சச்சின் டெண்டுல்கருக்கு பாரதரத்னா விருது கொடுக்கப்பட்டுள்ளது பொருத்தமானதுதான் என்று லதா மங்கேஷ்கர் கூறியுள்ளார்.
ஏற்கனவே லதாவும் பாரத ரத்னா விருதைப் பெற்றவர் என்பது நினைவிருக்கலாம். சச்சினுக்கு பாரதரத்னா விருது கொடுக்கப்பட்டிருப்பது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், சச்சின் செய்துள்ள செயல்கள் அனைத்துமே அரிதானவை, அபாரமானவை, யாராலும் நிகழ்த்த முடியாத சாதனைகள். எனவே அவருக்கு பாரதரத்னா பொருத்தமான விருதுதான். அனைத்து இந்திய மக்களையும அவர் பெருமைப்படுத்தியுள்ளார்.
இன்னும் ஒரு வருடத்திற்கு சச்சின் விளையாடியிருக்கலாம். மும்பை டெஸ்ட் போட்டியில் அவர் முதல் இன்னிங்ஸை விளையாடிய விதம் அதைத்தான் நிரூபிப்பதாக உள்ளது. இன்னும் ஒன்று அல்லது 2 ஆண்டுகளுக்கு விளையாடக் கூடிய முழுத் தகுதியும் சச்சினுக்கு உள்ளது.
ஓய்வுக்குப் பின்னர் சச்சின் ஒரு கிரிக்கெட் அகாடமியை தொடங்க வேண்டும். தனது அறிவையும், அனுபவத்தையும் இளைஞர்களுக்குத் தர வேண்டும். அப்படித்தான் அவர் நம்முடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடியும், வேண்டும் என்றார் லதா.