பிரதமர் மோடியை சந்தித்த 'கடவுள்'!
பிரதமர் மோடியை கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று சந்தித்தார்.
டெல்லி: பிரதமர் மோடியை கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று சந்தித்தார். அப்போது அவருடைய வாழ்க்கை வரலாறு படமான சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சச்சின் டெண்டுல்கரின் வாழ்கை வரலாறு 'சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் வரும் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இப்படத்தில் சச்சின் கதாபாத்திரத்தில் அவரே நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சச்சின் தனது மனைவி அஞ்சலியுடன் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார்.
பிரதமர் மோடியுடன் சந்திப்பு
அப்போது சச்சின் ஏ பில்லியன் ட்ரிம்ஸ் குறித்து அவர் பேசியதாக தெரிகிறது. மோடியுடனான சந்திப்பு குறித்து 2 போட்டோக்களை சச்சின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
|
படம் குறித்து விளக்கம்
அதில் சச்சின் ஏ பில்லியன் ட்ரிம்ஸ் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கியதாகவும் அவரின் ஆசிர்வாதங்களை பெற்றதகவும் தெரிவித்துள்ளார்.
|
மோடிக்கு நன்றி
மற்றொரு டிவிட்டரில் உங்களின் ஊக்கமளிக்கும் செய்திகளுக்கு நன்றி என்றும் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
|
இந்தியர்கள் பெருமிதம்
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சச்சின் உடன் ஒரு நல்ல சந்திப்பு இருந்தது. அவரது வாழ்க்கை பயணம் மற்றும் சாதனைகள் ஒவ்வொரு இந்தியனையும் பெருமைகொள்ள செய்கிறது. 1.25 பில்லியன் மக்களுக்கும் ஊக்கமளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் நயகன் இசையில்
சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகிறது.