ராகுல் காந்தி முதல், சகேத் கோகலே வரை.. பொய் தகவலுக்காக மன்னிப்பு கேட்ட தலைவர்கள் லிஸ்ட் பெரிதாகுதே

Subscribe to Oneindia Tamil

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி சகேத் கோகலே முன்னாள் இந்தியத் தூதர் லக்ஷ்மி முரளிதரன் புரிக்கு எதிராக 2021-ல் செய்த ட்வீட் அவதூறு வழக்கில், கடைசியாக மன்னிப்பை வெளியிட்டு வழக்கை முடித்துள்ளார். ஜெனீவாவில் சொத்து வாங்கிய விவகாரத்தில் அவதூறு கூறியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பன்முறை எச்சரிக்கைகள் மற்றும் சிவில் கைது எச்சரிக்கைக்குப் பிறகு, டெல்லி உயர் நீதிமன்றம் கட்டாயமாக்கிய மன்னிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கு முன்னர், கோகலே ₹50 லட்சம் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், எதிர்காலத்தில் எந்தவித அவதூறான கருத்தும் வெளியிடக்கூடாது என தடை விதித்துள்ளது.

bjp rahul gandhi

ஆனால் இது தனிப்பட்ட நிகழ்வல்ல. இதுபோன்று நீதிமன்றம் கட்டாயப்படுத்திய மன்னிப்புகள் மட்டுமல்ல, தனித்து பார்க்க வேண்டிய அரசியல் கலாச்சாரம் - ஆதாரமின்றி சர்ச்சைகளை கிளப்பும் பழக்க வழக்கம் தொடர்ந்து நிகழ்ந்துவருகிறது. இது பாமர மக்களிடம் நம்பிக்கையிழப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.

ராகுல் காந்தி முதல் மனி சங்கர் ஐயர் வரை

ஆதாரம் இல்லாமல் பேசி பின்னர் சட்டபூர்வமான சிக்கலில் மாட்டி மன்னிப்புக் கூறும் பட்டியலில் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து முன்வரிசையில் உள்ளனர்.

  • 2014-ல், ராகுல் காந்தி காந்தியைக் கொன்றது தொடர்பாக குறிப்பிட்ட அமைப்பை குற்றம்சாட்டியதற்காக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு வந்ததும், "நான் சில தனிநபர்களை குறித்தே சொன்னேன்" எனத் திருத்திக் கூறினார்.
  • 2016-ல், "Surgical Strike களை ரத்த வியாபாரம்" என கூறிய ராகுல் காந்தி விமர்சனம் வந்ததால் பேச்சை மாற்றிக்கொண்டார்.
  • 2019-ல், "சௌக்கிதார் சோர் ஹை" என்ற வாசகத்தை ரஃபேல் வழக்குடன் இணைத்ததற்காக, உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு நோட்டீஸ் வந்தபோது மன்னிப்பு கோரினார்.
  • மணி சங்கர் ஐயர், 2017-ல் பிரதமர் மோடியை "நீச்" என்று கூறி கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். பின்னர் அவர் "எனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது" என்றார்.
  • ஜெயராம் ரமேஷ், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக் மீது போலியான ஊடக செய்தியை நம்பி அவதூறு கூறி, பின்னர் எழுத்துப்பூர்வ மன்னிப்பு வழங்கினார்.
  • சஞ்சய் சிங், 2017-ல் AAP கபில் மிஸ்ரா மீது தாக்குதல் நடத்தியவர் BJP உறுப்பினர் என தவறாக குற்றம் சாட்டி பின்னர் மன்னிப்பு கேட்டார்.
  • திக்விஜய் சிங், 2023-ல் M.S. கோல்வால்கர் குறித்து அவதூறு கருத்து பகிர்ந்ததால் 2024-ல் நீதிமன்றம் எழுத்து மன்னிப்பு வழங்க உத்தரவிட்டது.

சகேத் கோகலே விவகாரம், இந்த பெரும் பிம்ப அரசியலின் ஒரு சிறு எடுத்துக்காட்டே. இது போலத்தான் - ஒரு பிரச்சனையை கிளப்பி, ஊடகத்தில் கலக்கம் உருவாக்கி, பின்னர் நீதிமன்ற உத்தரவால் மன்னிப்பு சொல்லும் பழக்கம் ஜனநாயகத்தில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+