தன்னைத் தானே ஷூவால் அடித்து கொண்ட சமாஜ்வாடி வேட்பாளர்.. உபியில் பரபரப்பு
உத்தரப்பிரதேசத்தில் வந்து ஆளும்
லக்னோ: சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஒருவர் பிரச்சார மேடையில் தன்னைத் தானே ஷூவால் அடித்து கொண்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச சட்டசபைக்கு வரும் 11-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதிவரை 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் சமாஜ்வாடி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.

இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஒருவர் பிரச்சார மேடையில் தன்னைத் தானே ஷூவால் அடித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் மேற்கு பகுதியில் உள்ள புலந்த்ஷல் பகுதியை சேர்ந்த சமாஜ்வாடி வேட்பாளர் சுஜட் அலம். அந்த தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் ஹஜி அலீமுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது திடீரென பிரச்சார மேடையில் சுஜட் தன்னைத் தானே ஷூவால் அடித்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரச்சாரத்தில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென "தெரியாமல் செய்த தவறுகளை மன்னித்து விடுங்கள்" என்று கூறிக் கொண்டே அடித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications