Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமாஜ்வாதி கட்சியிலிருந்து ராம்கோபால் யாதவை நீக்கிய உத்தரவை ஒரே மாதத்தில் வாபஸ் பெற்ற முலாயம் சிங்!

சென்ற அக்டோபரில் இருந்து 6 ஆண்டுகளுக்கு சமாஜ்வாதி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ராம்கோபால் யாதவ் மீண்டும் அக்கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

லக்னோ: மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் ராம்கோபால் யாதவ் சமாஜ்வாதி கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுவதாக அக்டோபரில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அக்கட்சியில் அவரை சேர்த்துள்ளதாக அதன் தலைவர் முலாயம் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியில் முலாயம் சிங்கிற்கும் அவரது மகனும் மாநில முதலமைச்சருமான அகிலேஷ் யாதவிற்கும் இடையே எழுந்த மோதலில் அக்டோபர் மாதத்திலிருந்து எதிர்வரும் 6 ஆண்டுகளுக்கு ராம் கோபால் யாதவை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்தார் முலாயம் சிங்.

Samajwadi Party reinstated Ramgopal Yadav

முதலமைச்சர் அகிலேஷ் யாதவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார் ராம் கோபால் யாதவ். இந்நிலையில், ராம்கோபால் யாதவ் சமாஜ்வாதி கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக முலாயம்சிங் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, சமாஜ்வாதி கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை செய்தியில், ராம் கோபால் யாதவ் கட்சியின் மாநிலங்களவைத தலைவராக நீட்டிப்பார் என்றும், கட்சியின் தேசிய நாடாளுமன்ற குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை அவர் வகிப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி முதல் 6 ஆண்டுகளுக்கு சமாஜ்வாதி கட்சியில் இருந்து ராம்கோபால் யாதவ் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

முலாயம்சிங் மற்றும் சிவபால்சிங் உறவினரான் ராம்கோபால் யாதவ் மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவிற்கு நெருக்கமாக செயல்பட்டு குடும்பத்தில் பிரச்னையை ஏற்படுத்த காரணமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இருப்பினும், தனது தந்தை முலாயம் சிங் யாதவுக்கு தமக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை என அகிலேஷ் யாதவ் கூறி வந்தார்.

ராம்கோபால் யாதவை கட்சியை விட்டு நீக்கும்போது அவர் மீது சிவ்பால் யாதவ் கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். அதாவது, பாஜகவுடன் இணைந்து உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியை பலவீணப்படுத்தும் சதிச் செயலில் ராம் கோபால் யாதவ் ஈடுபட்டதாக அவர் சாடினார்.

மேலும், அகிலேஷ்யாதவ் அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் வாங்கும் நடவடிக்கைகளில் ராம்கோபால் ஈடுபட்டதாகவும் சிவபால் குற்றம் சாட்டினார்.
பாஜக உயர் மட்டத்தலைவர்களை ராம்கோபால் யாதவ் மூன்று தடவை சந்தித்ததாகவும் ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாகவும் சிவ்பால் கடுமையாக சாடினார்.

ராம்கோபால் யாதவை கட்சியில் இருந்து நீக்கிவுடன் சிவ்பால் உள்ளிட்ட மேலும் 3 பேரை அகிலேஷ் அவரது அமைச்சரவையிலிருந்து அதிரடியாக நீக்கினார் .

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+