பத்மாவத் திரைப்படம் வெளியானால் தீபிகா படுகோனை உயிரோடு புதைப்போம்.. ராஜ்புத் தலைவர் எச்சரிக்கை!
பத்மாவத் திரைப்படம் வெளியானால் தீபிகா படுகோனை உயிரோடு புதைப்போம் என ராஜ்புத் அமைப்பின் தலைவர் தாகூர் அபிஷேக் சோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லக்னோ: பத்மாவத் திரைப்படம் வெளியானால் தீபிகா படுகோனை உயிரோடு புதைப்போம் என ராஜ்புத் அமைப்பின் தலைவர் தாகூர் அபிஷேக் சோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் பத்மாவதி. இதில் ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே, சாஹித் கபூர் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப்படம் வட மாநிலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதில் ராஜஸ்தானின் சித்துார்கர் கோட்டையை ஆண்ட, ராணி பத்மினியைதவறாக சித்தரித்து இருப்பதாகவும், ராஜபுத்ர வம்ச பெண்களை இழிவுபடுத்தும் வகையில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கொலைமிரட்டல்கள் விடுப்பு
இதைத்தொடர்ந்து ராஜபுத்ர வம்சத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். நடிகை தீபிகா படுகோன் மற்றும் இயக்குனர் சஞ்சய் பன்சாலி ஆகியோருக்கு கொலைமிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அவர்களின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன.

படத்தின் பெயர் மாற்றம்
இதைத்தொடர்ந்து மத்திய திரைப்பட தணிக்கை குழுவினரின் பரிந்துரைப்படி படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது. பத்மாவதி என்ற படத்தின் பெயரும், பத்மாவத் என மாற்றப்பட்டது.

4 மாநிலங்களில் தடை
படத்தை வெளியிட சென்சார்போர்டு சான்றிதழ் வழங்கியதை தொடர்ந்து வரும், 25ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தை வெளியிட குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது.

முறையாகாது - சுப்ரீம்கோர்ட்
இந்த உத்தரவை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட் தணிக்கை குழுவினர் சான்றிதழ் வழங்கிய பிறகு தடை விதிப்பது முறையாகாது என்று கூறியது.

25ஆம் தேதி ரிலீஸ்
மேலும் படம் வெளியாவதற்கான தடையை நீக்கிய சுப்ரீம்கோர்ட் வேறு எந்த மாநிலமும் படத்திற்கு தடை விதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டது. இதனை எடுத்து பத்மாவத் திரைப்படம் வருகிற 25ம் தேதி திட்டமிட்டப்படி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

தீபிகாவை உயிருடன் புதைப்போம்
இந்நிலையில் பத்மாவத் படம் வெளியானால் படத்தின் இயக்குநர் சஞ்சய் பன்சாலி மற்றும் நடிகை தீபிகா படுகோனை உயிருடன் புதைப்போம் என்று ராஜ்புத்திரர்கள் அமைப்பின் தலைவர் தாகூர் அபிஷேக் சோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications