பிகே படம் பார்க்க வந்த சஞ்சய் தத்துக்கு... இன்றுடன் பரோல் முடிகிறது- மேலும் நீட்டிக்கப்படுமா?
மும்பை: பிகே படத்திற்காக பரோலில் வெளிவந்துள்ள நடிகர் சஞ்சய் தத் தனது சிறை விடுமுறையை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க கோரி சிறை அதிகாரிகளுக்கு மனு செய்துள்ளார்.
கடந்த 1992ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில், தண்டனை பெற்ற சஞ்சய் தத் எரவாடா சிறையில் உள்ளார்.
தனது தண்டனைக் காலத்திற்கிடையில் பரோல் மற்றும் சிறை விடுமுறை எனப்படும் பரோலில் 118 நாட்களை சிறைக்கு வெளியே கழித்துள்ள சஞ்சய் தத், சில நாட்களுக்கு முன்னர் தன்னை பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். அவருடைய மனுவை ஏற்றுக்கொண்ட சிறை அதிகாரிகள், அவரை 14 நாட்கள் பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்தநிலையில் வரும் வியாழக்கிழமை பரோல் முடிய உள்ள நிலையில், மேலும் 14 நாட்கள் விடுமுறையை நீட்டித்துத்தரும்படி சிறை அதிகாரிகளுக்கு சஞ்சய் தத் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் சஞ்சய் தத்தின் பரோல் இன்றோடு முடிவடைய உள்ள நிலையில் அவருடைய பரோல் நீட்டிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.