சாரதா சிட்பண்ட் மோசடி: மேற்கு வங்க முன்னாள் டிஜிபி ரஜத் மஜூம்தார் கைது!
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் மேற்கு வங்க மாநில முன்னாள் டிஜிபி ரஜத் மஜூம்தார் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கம், ஓடிஷா மாநிலங்களில் செயல்பட்டு வந்த சாரதா சிட்பண்ட் உரிமையாளர், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகிவிட்டனர். இதனால் 2013 ஏப்ரலில் இந்த நிறுவனம் மூடப்பட்டது.
இதுகுறித்த வழக்கு கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தால் சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கும் கடும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் இம்மோசடி வழக்கில் மேற்கு வங்க மாநில முன்னாள் டிஜிபி ரஜத் மஜூம்தார் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications