பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் சின்னம் எங்களுக்குத்தான்.. இது "சின்னம்மா" தரப்பு வாதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 1912 பொதுக்குழு உறுப்பினர்கள் சசிகலாவுக்கு ஆதரவு அளிப்பதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதம் முன்வைத்தார்.

சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய, இரு அணியினரும் தங்கள் தரப்பு ஆவணங்கள் மற்றும் கருத்தை நேரில் இன்று தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இருதரப்பினரும் இன்று காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆரம்பித்தனர்.

Sasikala advocate projects AIADMK general body members support

முதலில் ஓ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, அதிமுக உறுப்பினர்கள் அதிகம் பேரின் ஆதரவு ஓ.பி.எஸ் அணிக்கு இருப்பதாக வாதம் முன்வைக்கப்பட்டது.

இதன்பிறகு சசிகலா தரப்பில் வாதிட்ட அரிமா சுந்தரம், 1912 பொதுக்குழு உறுப்பினர்கள் சசிகலாவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். அதேபோல, வெறும் 65 பொதுக்குழு உறுப்பினர்கள்தான் ஓபிஎஸ்-க்கு ஆதரவு அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அதிமுகவில் பிளவு என்பதே இல்லை என்று ஒரே போடாக போட்டார், வக்கீல் அரிமா சுந்தரம்.
சசிகலா அதிமுகப் பொதுசெயலராக சட்டப்படி தடை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தொண்டர்களை முன்வைத்து ஓ.பன்னீர்செல்வம் அணியும், பொதுக்குழு உறுப்பினர்களை முன்வைத்து சசிகலா அணியும் வாதிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+