For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சி.எம் வராமாட்டராமா? தினகரனிடம் கோபப்பட்ட சசிகலா

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை பார்க்கப் போன தினகரனிடம் என்னைப்பார்க்க முதல்வர் வரமாட்டாரா?என்று சசிகலா கோபமாக கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

By Raj
Google Oneindia Tamil News

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை அவரது அக்காள் மகன் டிடிவி தினகரன் நேற்று போய் சந்தித்துள்ளார். அப்போது அவரிடம், என்னைப் பார்க்க சியெம் வரமாட்டரா என்று கோபத்தோடு கேட்டாராம்.

சசிகலாவின் ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமிதான் இப்போது முதல்வராக இருக்கிறார். பதவியேற்ற உடனேயே பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை சந்திப்பார் பழனிச்சாமி என்று கூறப்பட்டது.

இது அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும் என நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் செல்லலாம் என்று சிலர் கூறவே எடப்பாடி பழனிச்சாமி அமைதியாக தலைமைச் செயலகம் சென்று விட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்ததை டிவியில் பார்த்து ரசித்த சசிகலா, தன்னை பார்க்க வந்த வழக்கறிஞர்களிடம் பாராட்டினாராம். சிறையில் இருந்தே தொலைபேசி மூலம் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்களுக்கு வாழ்த்துக்களை கூறினார்களாம்.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

முதல்வராக முறைப்படி பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி நேற்று 5 முக்கிய பைல்களில் கையெழுத்து போட்டு பணியை தொடங்கிவிட்டார். ஆனால் சசிகலாவை சந்திக்க சிறைக்கு இன்னும் போகவில்லை. காரணம் முதல்வராக இருந்து கொண்டு சிறையில் இருக்கும் குற்றவாளியை சந்திக்கப் போகக்கூடாது என்ற புரோட்டக்கால்தானாம்.

டிடிவி தினகரன் சந்திப்பு

டிடிவி தினகரன் சந்திப்பு

சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரனும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் நேற்று சசிகலாவை பார்த்து பேசினார்கள். அப்போது பேச்சு எல்லாம் தமிழக சிறைக்கு மாற்றுவது தொடர்பாகவே இருந்ததாம். அப்போது தினகரன், கொஞ்ச நாள் பொருத்துக்கொள்ளுங்கள். எப்படியாவது தமிழகத்திற்கு மாற்றி விடுகிறோம் என்று கூறினாராம்.

வசதி செய்யுங்க

வசதி செய்யுங்க

கர்நாடக அரசை சம்மதிக்க வைக்க காங்கிரஸ் அகில இந்திய தலைமையோடு பேசி வருகிறோம் என்று தினகரன் சொல்லியிருக்கிறார். சில வசதிகளை ஏற்பாடு செய்து தர ஆக்சன் எடுக்குமாறு கேட்டுக்கொண்டாராம் சசிகலா. இதனையடுத்தே அவர் கேட்ட ஃபேன், டேபிள் சேர், கட்டில், டிவி வசதிகளை ஏற்பாடு செய்தார்களாம்.

சிஎம் வரமாட்டாரா?

சிஎம் வரமாட்டாரா?

என்னைப் பார்க்க சி.எம்.வரமாட்டாரோ? என கோபமாக கேட்டிருக்கிறார் சசிகலா. முதல்வராக இருப்பதால் சில ப்ரோட்டகால் இடிக்கிறது , அதனால் தான் உடனடியாக அவர் வரவில்லை. நிச்சயம் வருவார் என சொல்லிவிட்டு வந்தாராம் தினகரன். முதல்வர் போகாவிட்டால் என்ன முக்கியமான சில அமைச்சர்கள் இன்று போய் சசிகலாவை சந்தித்து விட்டு வந்திருக்கிறார்களே அது போதாதா?

English summary
Sasikala is not happy with Edappadi Palanisamy for not visiting jail to meet her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X