பெங்களூர் சிறையில் விதிமீறல்.. சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு!
சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற கோரி சுப்ரீம்கோர்ட்டில் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற கோரி சுப்ரீம்கோர்ட்டில் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர், செந்தில் ஆறுமுகம் இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இடைப்பட்ட காலத்தில், சசிகலாவுக்கு பரோல் தரவே கூடாது எனவும் மனுவில் வலியுறுத்தியுள்ளார். மேலும், லஞ்சம் வாங்கிய பெங்களூரு சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர் அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சமாக வழங்கிய சசிகலா சிறைக்குள் தனி வசதிகளை அனுபவித்து வருகிறார் என சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
மேலும் சசிகலா ஜாலியாக ஷாப்பிங் சென்று வரும் அதிர்ச்சி வீடியோ கன்னட டிவி சேனல்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை கருத்தில் வைத்து சிறையை மாற்ற மனு தாக்கல் செய்துள்ளது சட்டப் பஞ்சாயத்து இயக்கம்.