ரூ. 7 லட்சம் கோடி.. தென்இந்தியாவை குறிவைக்கும் சவுதி அரேபியா.. மொத்தமாக குவியும் முதலீடுகள்!
டெல்லி: இந்தியாவில் 7 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையிலான நட்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திய பிறகு இந்த உறவு வலுவாகி உள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அதிகமாக சவுதியை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
என்ன முதலீடு
இந்த நிலையில் இந்தியாவில் 100 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 7 லட்சம் கோடியை முதலீடு செய்ய சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்றுதான் வெளியானது. இந்தியாவில் பல்வேறு தொழில் தொடங்குவது உட்பட நிறைய துறைகளில் இந்த முதலீடு செய்யப்பட உள்ளது.
எங்கு எல்லாம்
முக்கியமாக எரிசக்தி துறையில் அதிகமாக முதலீடு செய்யப்பட உள்ளது. அதேபோல் வாகனங்கள் , கார்கள் சார்ந்து ஆட்டோமொபைல் துறையிலும் அதிகமாக முதலீடு செய்யப்பட உள்ளது. சுரங்கம், விவசாயம், உள்கட்டமைப்பு, சுரங்க பணிகள் ஆகிய துறையிலும் முதலீடு செய்யப்பட உள்ளது.
மொத்தம் எத்தனை
மொத்தம் 40 துறைகளில் இதுபோல முதலீடு செய்யப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. கடந்த வருடம் 34 பில்லியன் டாலருக்கு சவுதி - இந்தியா இடையே ஒப்பந்தம் நடந்தது. தற்போது 100 பில்லியன் டாலராக இது உயர்த்தப்பட்டுள்ளது. முக்கியமாக தென் மாநிலங்களில் இந்த முதலீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எங்கு எல்லாம்
ஆம் தென் மாநிலங்களில் ஆட்டோமொபைல் துறையில் முதலீடு அதிகம் இருக்கும் என்கிறார்கள். ஏற்கனவே சவுதியின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோ உடன் ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது சவுதியின் மற்ற நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளது