ஏ.டி.எம்மில் பணம் எடுக்க கட்டணம் இல்லை.. எதிர்ப்பை தொடர்ந்து பல்டியடித்த எஸ்.பி.ஐ வங்கி
மும்பை: ஏடிஎம்களில் பணம் எடுத்தால் சேவை கட்டணம் என்று வெளியான தகவலை மறுத்துள்ள பாரத ஸ்டேட் வங்கி, புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது.
இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது எஸ்.பி.ஐ வங்கி.
*ஏடிஎம்களில் பணம் எடுத்தால் சேவைக்கட்டணம் என்பது தவறு. சுற்றறிக்கையில் தவறு இருந்ததே குழப்பத்திற்கு காரணம்.
*E-Wallet ல் உள்ள பணத்தை ஏ.டி.எம். வழியாக எடுத்தால் மட்டுமே ரூ.25 வசூலிக்கப்படும்.
*எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தால் கட்டணம் என்ற தகவல் உண்மை இல்லை
*சாதாரணமாக ஏடிஎம்களில் பணம் எடுப்பது குறித்து ஏற்கெனவே உள்ள நடைமுறையே தொடரும்
*'இ வாலெட்' மூலம் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் முறையை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்ய உள்ளது
*பிற வங்கி வாடிக்கையாளர்கள் எஸ்.பி.ஐ. ஏடிஎம்மை பயன்படுத்தினால் ரூ.25 சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும்
*எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம். சேவைக்கட்டணத்தில் இருந்து விலக்கு
இவ்வாறு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.