எஸ்.பி.ஐ வங்கி குறைந்தபட்ச இருப்பு தொகை இனி ரூ.3000 போதும் - பென்சனர்களுக்கு கிடையாது
எஸ்.பி.ஐ வங்கி சேமிப்பு கணக்கிற்கான குறைந்தபட்ச இருப்பு தொகை ரூ.3000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள், சிறார் கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் இருப்பு வைக்க தேவையில்லை.
டெல்லி: பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்கிற்கான குறைதபட்ச இருப்பு தொகையை 5000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாக குறைத்துள்ளது. ஓய்வூதியதாரர்கள், மைனர்களின் கணக்குகளுக்கு குறைந்த பட்ச இருப்புத் தொகை தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு ஊழியர்களையும் வாடிக்கையாளர்களாக கொண்ட ஒரே வங்கி . தற்போது எஸ்.பி.ஐ வங்கி தனியார் துறை வங்கி போல் தனது வாடிக்கையாளர்களின் இருப்பு தொகையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகரித்தது.

கிராமப்புற வங்கி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் இருப்பு தொகையாக ரூ.1000 வைத்திருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருந்தால் உரிய அபராதம் செலுத்த வேண்டும்.
இதேபோன்று பெருநகர பகுதி வங்கி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் இருப்பு தொகையாக ரூ.5000 வைத்திருக்க வேண்டும். நகர் பகுதி வங்கி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் இருப்பு தொகையாக ரூ.5000 வைத்திருக்க வேண்டும். என்று அறிவித்தது.
தனியார் துறை வங்கிகளில் மட்டும்தான் குறைந்தப்பட்ச இருப்பு தொகை ரூ.5000 ஆக இருக்கும். ஆனால் பொதுத்துறை வங்கிகளில் பெரும்பாலும் அதிகப்பட்சமாக இருப்பு தொகை ரூ.500 தான் இருந்து வருகிறது. தற்போது எஸ்.பி.ஐ. வங்கிகளின் இந்த செயலால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications