ராஜீவ் காந்தி கொலை வழக்கு: மறு விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மறு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மறு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட ராஜீவ்காந்தி கொலை வழக்குப் பின்னணியிலுள்ள சதியை விசாரிக்கவில்லை என்று சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ராஜீவ்காந்தியை கொல்ல பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தயாரிக்கப்பட்ட விதம் குறித்து பல்நோக்கு கண்காணிப்புக் குழு என்று சொல்லப்படும் எம்டிஎம்ஏவின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்று மனுதாரர் கூறியிருந்தார். மேலும் எம்டிஎம்ஏவின் அறிக்கை தனக்குத் தேவை என்றும் பேரறிவாளன் மனுவில் கோரியிருந்தார்.
ஏனெனில் வெடிகுண்டு தயாரிக்க பேட்டரிகளை வாங்கிக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே பேரறிவாளன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்த வெடிகுண்டு எப்படி தயாரிக்கப்பட்டது, யார் தயாரித்தார்கள் என்ற விவரம் 17 ஆண்டுகளாக நடந்த விசாரணை அறிக்கையில் இல்லை என்ற செய்தி வெளியானதையடுத்து ராஜீவ் காந்தி வழக்கில் திருப்பம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக மறு விசாரணை நடத்திய சிபிஐ அறிக்கையை தாக்கல் செய்ய சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் 23ம் தேதிக்கு இந்த வழக்கின் மறுவிசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications