முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்குக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
டெல்லி: நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக நாட்டின் முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்குக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமது வயது விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வி.கே.சிங் விமர்சித்திருந்தார். இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து வி.கே.சிங் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் வி.கே.சிங்குக்கு நோட்டீஸும் அனுப்பி வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இன்று இது தொடர்பான விசாரணையின் போது, நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சிப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வரும் விமர்சனங்களை நாங்கள் ஏற்று கொள்ள இயலாது என்று தெரிவித்துள்ளது.
அத்துடன் வி.கே.சிங்குக்கு எதிராக அரசு வழக்கறிஞர் குற்றவழக்கை தாக்கல் செய்ய அனுமதி அளித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications