நிலக்கரி சுரங்க ஊழல்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு
டெல்லி: நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் விசாரணை நிலவர அறிக்கையை ஜூலை 7-ந் தேதியன்று தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ தரப்பும் விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறது.

இன்றைய விசாரணையின் போது, நிலக்கரி ஊழல் தொடர்பாக எந்த ஒரு வழக்கையும் மூடவில்லை என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜூன் 30-ந் தேதி வரையிலான விசாரணை அறிக்கையை ஜூலை 7-ந் தேதியன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் நிலக்கரி ஊழல் தொடர்பான அனைத்து விசாரணை ஆவணங்களையும் ஊழல் தடுப்பு கண்காணிப்பகத்திடம் ஒப்படைக்கவும் சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications