பட்டாசுகளால் ஏற்படும் தீமைகளை மக்களுக்குச் சொல்லுங்கள்...மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் அட்வைஸ்
டெல்லி: தீபாவளி பட்டாசுகளால் ஏற்படும் தீங்குகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும்படி மத்திய மற்றும் மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. தலைமை நீதிபதி ஹெச். எல்.தத்து, நீதிபதி அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தக் கருத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் விரிவான விளம்பரங்களை வெளியிடுமாறும் அரசுகளை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள், பட்டாசுகளால் ஏற்படும் தீமைகள் பற்றி மாணாக்கர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்தாலோசித்து, அவர்களது கருத்துகளை கேட்டறிந்து ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக இரைச்சல் இல்லாத மாசற்ற சுற்றுச்சூழல் என்பது தங்களது உரிமை எனக்கூறி 14 முதல் 6 வயதுடைய மூன்று குழந்தைகள் சார்பில் அவர்களது பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை டெல்லியில் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications