பட்டாசுகளால் ஏற்படும் தீமைகளை மக்களுக்குச் சொல்லுங்கள்...மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் அட்வைஸ்
டெல்லி: தீபாவளி பட்டாசுகளால் ஏற்படும் தீங்குகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும்படி மத்திய மற்றும் மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. தலைமை நீதிபதி ஹெச். எல்.தத்து, நீதிபதி அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தக் கருத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் விரிவான விளம்பரங்களை வெளியிடுமாறும் அரசுகளை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள், பட்டாசுகளால் ஏற்படும் தீமைகள் பற்றி மாணாக்கர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்தாலோசித்து, அவர்களது கருத்துகளை கேட்டறிந்து ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக இரைச்சல் இல்லாத மாசற்ற சுற்றுச்சூழல் என்பது தங்களது உரிமை எனக்கூறி 14 முதல் 6 வயதுடைய மூன்று குழந்தைகள் சார்பில் அவர்களது பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை டெல்லியில் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications