தகவல்களை பாதுகாக்க பேஸ்புக், வாட்ஸ் ஆப் கொள்கைகள் என்ன?... உச்சநீதிமன்றம் கேள்வி
வாடிக்கையாளர் குறித்த தகவலை வேறு நபருக்கு வழங்காததை உறுதி செய்ய பேஸ்புக், வாட்ஸ் ஆப் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: வாடிக்கையாளரின் தகவல்களை பாதுகாக்க எந்த கொள்கைகளை பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகிய நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் கொடுக்கப்படும் தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதன்படி வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு மத்திய அரசுக்கு தகவல்களை ரகசியம் காப்பது குறித்து கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் விளக்கம் கோரியது. இதுகுறித்து கடந்த 4 மாதங்களாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தகவல் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கும் நடைமுறைகளை டிராய் செய்து வருவதாக அப்போதைய நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தெரிவித்திருந்தார்.
மேலும் வாட்ஸ் ஆப்பில் இருக்கும் தகவலை செல்போனில் இருந்து அழித்தாலும் வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் சர்வரில் இந்த தகவல்கள் அப்படியே இருப்பதாகவும் குற்றம்சாட்டபட்டது. இதைத் தொடர்ந்து சர்வரில் இருந்தும் விவரங்களை நீக்க வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாடிக்கையாளரின் தகவல்களை பாதுகாக்க எந்த கொள்கைகளை பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகிய நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.
பேஸ்புக், வாட்ஸ் ஆப் நிறுவனங்கள் இன்னும் 4 வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாப்பது தொடர்பான கொள்கைகள் குறித்து பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications