தகவல்களை பாதுகாக்க பேஸ்புக், வாட்ஸ் ஆப் கொள்கைகள் என்ன?... உச்சநீதிமன்றம் கேள்வி
வாடிக்கையாளர் குறித்த தகவலை வேறு நபருக்கு வழங்காததை உறுதி செய்ய பேஸ்புக், வாட்ஸ் ஆப் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: வாடிக்கையாளரின் தகவல்களை பாதுகாக்க எந்த கொள்கைகளை பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகிய நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் கொடுக்கப்படும் தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதன்படி வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு மத்திய அரசுக்கு தகவல்களை ரகசியம் காப்பது குறித்து கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் விளக்கம் கோரியது. இதுகுறித்து கடந்த 4 மாதங்களாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தகவல் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கும் நடைமுறைகளை டிராய் செய்து வருவதாக அப்போதைய நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தெரிவித்திருந்தார்.
மேலும் வாட்ஸ் ஆப்பில் இருக்கும் தகவலை செல்போனில் இருந்து அழித்தாலும் வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் சர்வரில் இந்த தகவல்கள் அப்படியே இருப்பதாகவும் குற்றம்சாட்டபட்டது. இதைத் தொடர்ந்து சர்வரில் இருந்தும் விவரங்களை நீக்க வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாடிக்கையாளரின் தகவல்களை பாதுகாக்க எந்த கொள்கைகளை பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் ஆகிய நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.
பேஸ்புக், வாட்ஸ் ஆப் நிறுவனங்கள் இன்னும் 4 வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாப்பது தொடர்பான கொள்கைகள் குறித்து பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications